×

நாளை மின்தடை

 

திருவில்லிபுத்தூர், ஜூன் 17: திருவில்லிபுத்தூர் மின் கோட்ட செயற்பொறியாளர் சின்னத்துரை வௌியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள மல்லிபுதூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

எனவே மல்லிபுதூர் துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் மல்லிபுதூர், மல்லி ஏரியா, நாகபாளையம், மாயத்தேவன்பட்டி, அப்பநாயக்கர்பட்டி, நக்கமங்களம், மானகசேரி, கோப்பையநாயக்கன்பட்டி, வேண்டுராயபுரம், சாமிநத்தம், ஈஞ்சார், ராஜா நகர், சிவாநகர், கார்த்திகைப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Tiruvilliputhur ,Thiruvilliputhur ,Chinnathurai ,Dinakaran ,
× RELATED நெல்லையில் சாதிய வன்மத்தால்...