×

மேலூர் அருகே வீட்டில் பார் நடத்திய 2 பேர் கைது

மேலூர், ஜூன் 17: மேலூர் அருகே வீட்டில் பார் நடத்தியவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலூர் அருகே வெள்ளநாயகம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் செந்தில்வீரணன்(33). இவர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் உள்ள தனது வீட்டின் முன்பு கோழிக்கடை நடத்தி வருகிறார். அக்கடை அருகே அவரது வீட்டில் உள்ள அறையில் பார் போன்று 30 பேர் அமரக்கூடிய வகையில் டேபிள், சேர் போன்றவைகளை அமைத்து, செயல்பட்டு வந்துள்ளார்.

இந்த கடையில் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் சப்ளை செய்வதற்கு 4 பேர் பணியாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து மேலூர் விஏஓ வடிவேல், கலால் துறை மற்றும் மேலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த மேலூர் போலீசார், செந்தில் வீரணன் மற்றும் அங்கு பணியில் இருந்த நொண்டிக்கோவில்பட்டியை சேர்ந்த சேவுகன் மகன் சேகர்(35) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மேலூர் அருகே வீட்டில் பார் நடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Mellore ,MALORE ,MULOR ,Melore ,Dinakaran ,
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை