×

சோழவரம் ஒன்றியத்தில் வைபை வசதியுடன் கண்காணிப்பு கேமரா : எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

புழல்: சோழவரம் ஒன்றியத்தில், வைபை வசதியுடன் கண்கானிப்பு கேமராவை எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ துவக்கி வைத்தார். சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் அலமாதி, எடப்பாளையம் ஸ்ரீராம் நகர் ஆகிய பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை பணிகள் நடைபெற்று வருகிறது. ஊராட்சிக்குட்பட்ட சாந்தி நகர், பாரதி நகர், நேதாஜி நகர், அலமாதி உட்பட பல்வேறு பகுதிகளில் முக்கியமான சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராவுடன் வைபை இணைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சாந்தி நகர் நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய குழு துணை தலைவருமான கருணாகரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சுதர்சனம் கலந்து கொண்டு 100 நாள் பணியில் ஈடுபட்டு வரும் பெண்களிடம் குறைகளை கேட்டு அறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் சாந்தி நகரில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி, அருகில் உள்ள நகரப் பகுதிகளில் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள வைபை உடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தார்.

பின்னர், அலமாதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்து, அங்கு மருத்துவர் மற்றும் செவிலியர்களிடமும் என்னென்ன அடிப்படை வசதிகள் தேவை என கேட்டறிந்தார். சாந்தி நகர் ரேஷன் கடைக்கு நேரில் சென்று அங்கு பொருட்களை வாங்க வந்த பொதுமக்களிடம் ரேஷன் பொருட்கள் சரியான முறையில் வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார். இதில், சோழவரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராமகிருஷ்ணன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், திமுக ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சோழவரம் ஒன்றியத்தில் வைபை வசதியுடன் கண்காணிப்பு கேமரா : எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Cholavaram ,Union ,S.Sudarsanam MLA ,MLA ,S. Sudarsanam ,Cholavaram Union ,Alamathi Panchayat ,
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...