×

வலிப்பு நோயால் பாதித்த பெண் அதிக மாத்திரை சாப்பிட்டதால் உயிரிழப்பு

கரூர், ஜூன் 17: கரூர் மாவட்டம் வாங்கல் அருகே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண், அதற்காக கூடுதலாக மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள மண்மங்கலம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் புனிதா (35). கூலித்தொழிலாளி. இவர், கடந்த சில மாதங்களாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 7ம்தேதி அன்று புனிதா தவறுதலாக வலிப்பு நோய்க்கான மாத்திரைகளை கூடுதலாக சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால், பாதிக்கப்பட்ட புனிதா, மயங்கி கிழே விழுந்தார். கரூர் தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் புகாரின் பேரில், வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வலிப்பு நோயால் பாதித்த பெண் அதிக மாத்திரை சாப்பிட்டதால் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Karur ,Wangal ,Dinakaran ,
× RELATED செங்குந்தபுரம் செல்லும் சாலையில்...