தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ.கோயில் தெருவில் பாஜவின் 9ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நடிகை குஷ்பு, இளைஞர் மேம்பாட்டு விளையாட்டுத்துறை பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, பால்கனகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
இந்த கூட்டத்தில் கொடி அமைத்தது, பேனர் வைத்தது, எல்இடி திரை அமைத்ததற்கு மாநகராட்சியிடம் இருந்து உரிய அனுமதி பெறவில்லை. இதுகுறித்து திமுகவினர் புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், பாஜவினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
The post அனுமதியின்றி பேனர், எல்இடி திரை பாஜவினர் மீது வழக்கு appeared first on Dinakaran.