×

டூவீலர் மோதி விவசாயி பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன் (54). இவர், நேற்று முன்தினம் இரவு தாமல் கிராமத்தில் தன்னுடைய வயலுக்கு சென்று பார்த்துவிட்டு இரவு சுமார் 9 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். தாமல் சிவன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது. பின்னால் வந்த டூவீலர் எதிர்பாராத விதமாக மோதியதில் தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலுசெட்டி சத்திரம் போலீசார், நடராஜன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உயிரிழந்த ராஜேந்திரன் மகன் சுதாகர் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் மோதி விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Rajendran ,Thamal ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான...