×

ஓரிக்கை பகுதியில் ரூ.14.50 லட்சத்தில் பயணியர் நிழற்குடை: உத்திரமேரூர் எம்எல்ஏ திறந்து வைத்தார்

காஞ்சிபுரம்: ஓரிக்கை பகுதியில் ரூ.14.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடையினை, உத்திரமேரூர் எம்எல்ஏ திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியில் காந்தி நகர் பேருந்து நிறுத்தம் இடத்தில், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.14.50 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிறுத்துத்தில் பயணியர் நிழற்குடை இடம் கட்டப்பட்டது.

தமிழகத்திலேயே முதன் முறையாக முன்மாதிரியாக பேருந்து நிறுத்தும் இடமான இதில் ஆண், பெண் என தனித்தனியாக கழிப்பறை, தண்ணீர் வசதி, மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக தாழ்வட்ட பாதை போன்ற அடிப்படை வசதிகளுடன் கூடிய முன்மாதிரியான பேருந்து நிறுத்தும் இடத்தினை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்த வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக உத்திரமேருர் எம்எல்ஏ சுந்தர் கலந்துகொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வருவதால், பொதுமக்கள் தான் திறக்க வேண்டும் என அங்கிருந்த முதியவரை அழைத்து, பேருந்து நிறுத்தம் தொடங்கி வைக்கப்பட்டது.

பின் பேருந்து நிறுத்தம் இடத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பொதுமக்களுடன் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, துணை மேயர் குமரகுருநாதன் மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன், மாநகராட்சி ஆணையர் கண்ணன், காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஓரிக்கை பகுதியில் ரூ.14.50 லட்சத்தில் பயணியர் நிழற்குடை: உத்திரமேரூர் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Orikai ,Nizhalkudai ,Uttara Merur MLA ,Kanchipuram ,Uttaramerur MLA ,
× RELATED விபத்தில் 2 பேர் பலி