×

நிழற்குடை சரிந்து 4 பெண்கள் காயம்

சோழிங்கநல்லூர்: பெசன்ட் நகர் எம்.ஜி.சாலை வண்ணான் துறை பேருந்து நிறுத்தத்தில், நேற்று மாலை பேருந்துக்காக பயணிகள் 6க்கும் மேற்பட்ேடார் காத்திருந்தனர். அப்போது, அங்கிருந்த நிழற்குடை திடீரென சரிந்து, இருக்கையில் அமர்ந்திருந்த 4 பெண்கள் மீது விழுந்தது. இதை பார்த்த மற்றவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் நிழற்குடையின் கீழ் சிக்கிய 4 பெண்களையும் பத்திரமாக மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், காயமடைந்தவர்கள் திருவொற்றியூரை சேர்ந்த கோகிலா (69), திருவான்மியூரை சேர்ந்த ஜெயலட்சுமி (40), வியாசர்பாடியை சேர்ந்த முத்துலட்சுமி (49), பூங்கொடி (60) என்பதும், நிழற்குடையின் தூண்கள் துருப்பிடித்ததால் சரிந்து விழுந்ததும் தெரியவந்தது. இவ்விபத்து குறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சென்னை மாநகராட்சி ஊழியர்கள் கிரேன் மூலம் கீழே விழுந்த நிழற்குடையை அகற்றினர்.

The post நிழற்குடை சரிந்து 4 பெண்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Chozhinganallur ,Besant Nagar ,MG Road Vannan ,Dinakaran ,
× RELATED வாக்களிக்க சொந்த ஊர் சென்ற...