×

விஜயகரிசல்குளம் அகழாய்வில் பாண்டி விளையாட பயன்படும் சில்லுவட்டம் கண்டுபிடிப்பு

ஏழாயிரம்பண்ணை: வெம்பக்கோட்டை அருகே, விஜயகரிசல்குளத்தில் நடக்கும் இரண்டாம் கட்ட அகழாய்வில், விளையாட்டிற்கு பயன்படுத்திய சுடுமண்ணாலான சில்லுவட்டம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்னோர்கள் வணிகத்திற்கு மட்டுமல்ல பொழுதுபோக்கு, விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்தது தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே, விஜயகரிசல்குளத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதில் 13 அடி ஆழம் வரை 6 குழிகள் இதுவரை தோண்டப்பட்டுள்ளன. இதில், சுடு மண்ணாலான பொம்மை, புகைப்பிடிப்பான் கருவி, காதணி, பதக்கம், மணிகள், வணிக முத்திரை, சங்கு வளையல்கள், யானை தந்தத்தால் ஆன பகடை, தக்களி, தங்க அணிகலன், செங்கல் உள்ளிட்ட 2,020 பொருட்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில் பெண்கள் பாண்டி விளையாட பயன்படுத்திய சுடு மண்ணாலான சில்லுவட்டம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் கட்ட அகழாய்வில் ஆண்கள் விளையாடிய சதுரங்க காய் கிடைத்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட அகழாய்வில் பெண்கள், சிறுமியர் பாண்டி விளையாட பயன்படுத்திய சுடுமண்ணாலான சில்லுவட்டம் கிடைத்துள்ளது. இதன்மூலம் வணிகத்திற்கு மட்டுமல்ல பொழுதுபோக்கு, விளையாட்டிற்கும் நமது முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

The post விஜயகரிசல்குளம் அகழாய்வில் பாண்டி விளையாட பயன்படும் சில்லுவட்டம் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Vijayakarisalkulam ,Ejayarampannai ,Vembakottai ,
× RELATED ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை...