×

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே பச்சைமலை மங்களம் அருவியில் குளித்த இருவர் உயிரிழப்பு..!!

சேலம்: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே பச்சைமலை உள்ள மங்களம் அருவியில் குளித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உதகை அருகே உள்ள சிங் போஸ்ட் பகுதியை சேர்ந்த நிஷாந்த், ஜஸ்வந்த் மற்றும் தமீம் ஆகியோர் திருச்சி மாவட்டம் முசுரி அருகே உள்ள தங்கள் உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர். அங்கிருந்து அருவியில் குளிக்கவந்த மூவரும் பாறை மீது எறியுள்ளனர். அப்போது பாறையில் இருந்து வழுக்கி அருவி நீரில் மூவரும் விழுந்தனர்.

இதில் பலத்த காயமுற்ற ஜஸ்வந்த் மற்றும் தமீம் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். உடன் சென்ற ஆர்த்தி அருகில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தவர்களை உதவிக்கு அழைத்து படுகாயமடைந்த நிஷாந்த்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். அங்கு அளிக்கப்பட்ட முதலுதவிக்கு பிறகு திருச்சி அரசு மருத்துவமனைக்கு நிஷாந்த் அனுப்பப்பட்டார். இது தொடர்பாக தகவலறிந்து தம்மம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் . உயிரிழந்த இருவரின் சடலங்களை போலீஸ் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பினர்.

The post சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே பச்சைமலை மங்களம் அருவியில் குளித்த இருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Pachimalai Mangalam ,Dammambati, Salem District ,Salem ,Mangalam ,Pachimalai ,Salem district ,Dammambati ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்