×

திருத்தணியில் பள்ளி மாணவர்கள் இடையே தகராறில் உறவினர்கள் தலையிட்டதால் போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பு..!!

திருத்தணி: திருத்தணியில் பள்ளி மாணவர்கள் இடையே தகராறில் உறவினர்கள் தலையிட்டதால் போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணி காந்தி சாலையில் உள்ள டாக்டர். ராதாகிருஷ்ணன் அரசு பள்ளியில் படிக்கும் தரணிவராகபுரம் கிராமத்தை சேர்ந்த மாணவருக்கும், பொன்பாடியை சேர்ந்த மாணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றனர்.

பொன்பாடி மாணவரின் உறவினர்கள் 10 பேர் மற்றொரு மாணவரின் வீட்டிற்கே சென்று தப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை கோரி சென்னை-திருப்பதி சாலையில் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். போலீசார் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். மாணவர்கள் இடையே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

The post திருத்தணியில் பள்ளி மாணவர்கள் இடையே தகராறில் உறவினர்கள் தலையிட்டதால் போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Thirthani ,Tiruthani ,Thiruthani ,Tiritani Gandhi Road ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலுக்கு...