×

தா.பழூர் அருகே மதுவிற்ற 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது

தா.பழூர், ஜூன் 16: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தனசிங் (60) மற்றும் வினோத் (30) ஆகியோரது வீடுகளில் சோதனை செய்தனர். அதில் விற்பனை செய்வதற்காக அவர்களது வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தனசிங் மற்றும் வினோத் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அதே போல தா.பழூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அமிர்தராயன் கோட்டை காலனி தெருவை சேர்ந்த விஜயகுமார் மனைவி காந்திமதி(37), கோடங்குடி தெற்கு தெருவை சேர்ந்த மணிகண்டன் மனைவி நிர்மலா(44) ஆகியோர் அவர்களது வீட்டின் பின்புறம் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post தா.பழூர் அருகே மதுவிற்ற 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bhaur ,Tha.Bahur ,Ariyalur District Vikramangalam ,Assistant Inspector ,Manikandan ,
× RELATED தா.பழூர் பகுதி சாலையில் வேகத்தடைகளில் வர்ணம் பூசும் பணி