×

ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த போது கணவன் கண் முன்பாக மனைவி தலைநசுங்கி பலி

 

பாலக்காடு, ஜூன்16: பாலக்காடு மாவட்டம் நெம்மாராவை அடுத்த அளுவச்சேரியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (42). இவரது மனைவி ரேவதி (எ) ரம்யா (36). தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் நெம்மாராவிலிருந்து கொல்லங்கோட்டிற்கு ஸ்கூட்டரில் பயணித்தனர்.கரிங்குளம் வங்கி முன்பாக உள்ள சாலையில் இருந்து இறங்கி ஏறிய போது ஸ்கூட்டர் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

அப்போது திருச்சூரிலிருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த லாரி இவரது ரம்யாவின் தலைமீது ஏறி இறங்கியதில் அவர் தலைநசுங்கி உயிரிழந்தார். விபத்து குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த போது கணவன் கண் முன்பாக மனைவி தலைநசுங்கி பலி appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Manikandan ,Aluvachery ,Nemmara ,Revathi ,Dinakaran ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில்...