×

பொன்னேரி அருகே திறக்கப்படாத கழிப்பறைகள்: மாணவ, மாணவிகள் அவதி

 

பொன்னேரி: பொன்னேரி அருகே, திறக்கப்படாத கழிப்பறைகளால், மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கடப்பாக்கம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இவர்கள் கழிப்பறை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் 2021-22ம் ஆண்டிற்கான மீஞ்சூர் ஒன்றியக் குழு 15வது நிதி குழு மானியத்தில் ரூ.4,39,130 மதிப்பீட்டில் இப்பள்ளி மாணவர்களுக்காக கழிப்பறை கட்டப்பட்டது‌. ஆனால் கழிப்பறை கட்டப்பட்டு நீண்ட காலமாகியும் இதுவரை திறக்கப்படாததால் மாணவ மாணவிகள் கழிப்பறைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வெட்ட வெளியில் கழிப்பறையை உபயோகப்படுத்துவதால் தொற்றுநோய் பரவக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பள்ளி அருகிலேயே கழிவு நீர் தேக்கமடைந்துள்ளதால் தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. கடப்பாக்கம் ஊராட்சியில் உள்ள சிறுபழவேற்காடு அரசு உதவி தொடக்கப்பள்ளியில் குடிநீர் இல்லாமலும் கழிப்பறை வசதி இல்லாமலும் பள்ளி மாணவ மாணவிகள் அவதி உற்று வருகின்றனர். எனவே உடனடியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையினர் கழிப்பறையை திறந்து வைத்து மாணவ, மாணவிகளின் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொன்னேரி அருகே திறக்கப்படாத கழிப்பறைகள்: மாணவ, மாணவிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Tiruvallur district ,Kadapakkam ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...