×

கைத்துப்பாக்கி, தோட்டாவுடன் வாலிபர் கைது

சென்னை: கைத்துப்பாக்கி, தோட்டாவுடன் வந்த வாலிபரை தாம்பரம் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தாம்பரம் அருகே சோமங்கலம் நடுவீரப்பட்டு அருகே போலீசார், நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால், சந்தேகமடைந்த போலீசார் வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 3 தோட்டாக்கள், தோட்டாக்களை லோடு செய்ய பயன்படுத்தும் 3 ஹேண்டில்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால், அந்த வாலிபரை கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து, அவர் யார், என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கைத்துப்பாக்கி, தோட்டாவுடன் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tambaram police ,Somangalam ,Tambaram ,Dinakaran ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட...