×

காஞ்சிபுரம் அருகே போலி பெண் டாக்டர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் உரிய மருத்துவ படிப்பு ஏதும் படிக்காமல், நோய்வாய்ப்பட்டு வரும் பொதுமக்களுக்கு பெண் ஒருவர் மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதார பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கோபிநாத் தலைமையிலான குழுவினர், தாமல் கிராமத்தில் செயல்படும் தனியார் மருத்துவமனையில், நேற்று முன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, உரிய மருத்துவ படிப்பு ஏதும் படிக்காமல் மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவர் திலகவதி என்ற பரிதாபேகம் (45) என்பவர், நோய் பாதிப்பால் வரும் கிராம மக்களுக்கு மருத்துவம் பார்த்து ஊசி போட்டு, மருந்து மாத்திரைகளை கொடுத்ததை கண்டறிந்தனர். இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் கோபிநாத், பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், போலி பெண் மருத்துவர் திலகவதியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post காஞ்சிபுரம் அருகே போலி பெண் டாக்டர் கைது appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Thamal village ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான...