×

ராள்ளாபாடி சீரடி சாய்பாபா கோவில் 5ம் ஆண்டு வருடாபிஷேக விழா: 108 பெண்கள் பால்குடம் ஏந்தி வழிபாடு..!

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே ராள்ளாபாடி சீரடி சாய்பாபா திருக்கோவில் ஐந்தாம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு 108 பெண்கள் பால்குடம் ஏந்தி வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ராள்ளாபாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் கும்பாபிஷேக் நாளான ஐந்தாம் ஆண்டு இன்று வருடாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை புனித நீராடி 108 பக்தர்கள் காப்பு கட்டி,விரதம் இருந்து அஞ்சாத்தம்மன் கோவிலில் இருந்து மேல தாளங்கள் முழங்க தலையில் பால்குடம் சுமந்து சுமார் 1 கிலோ மீட்டர் வரை ஊர்வலமாக சென்று கோவிலில் உள்ள சீரடி சாய்பாபாவிற்கு பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து முன்னதாக கணபதி ஹோமம், தன்வந்திரி சுதர்சன ஹோமம், ஆயுஷ் ஹோமம், பாபா மூல மந்திர ஹோமம், நவகிரக சாந்தி பரிகார ஹோமம், உள்ளிட்டவை நடைபெற்றது.

பின்னர் சாய்பாபாவிற்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. கோவிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post ராள்ளாபாடி சீரடி சாய்பாபா கோவில் 5ம் ஆண்டு வருடாபிஷேக விழா: 108 பெண்கள் பால்குடம் ஏந்தி வழிபாடு..! appeared first on Dinakaran.

Tags : Rallabadi ,Sirdi ,Saibaba Temple ,Year Anniversary Festival ,Tiruvallur ,Rallapadi Seerdi Saibaba Temple ,Periyapalayam ,
× RELATED தேனி அருகே லெட்சுமிபுரம் கிராமத்தில்...