×

உலக நன்மைக்காக ஏகாதசி பூஜை

 

பெரியகுளம், ஜூன் 15: பெரியகுளம் தெற்கு அக்ஹரகாரத்தில் நாமத்வார் பிரார்த்தனை மையம் உள்ளது. ஏகாதசி முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள், பன்னீர் மற்றும் மங்கள திரவிய பொருளால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்திரம், ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திரம், ஸ்ரீகுருஜி அஸ்டோத்திரம் குறித்து அர்ச்சனை நடைபெற்றது.

ஹரே ராம ஹரே கிருஷ்ண என்ற மகாமந்திரத்தை உலக நன்மைக்காகவும் எல்லோருக்கும் எல்லாவிதமான நன்மைகள் கிடைக்க வேண்டி 12 மணி நேரம் நாம கீர்த்தனம் தொடர்ந்து நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ண சைதன்ய தாஸ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post உலக நன்மைக்காக ஏகாதசி பூஜை appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Namadwar ,South Akharakaram ,Ekatasi ,Prior Swaami ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால்...