×

திருவேற்காட்டில் மாடியில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் பலி: போலீசார் விசாரணை

 

பூந்தமல்லி: திருவேற்காட்டில், மாடியில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் பலியானார். மதுரவாயல் அடுத்த நெற்குன்றம், சக்தி வேல் நகரை சேர்ந்தவர் கார்த்திக்(44), கொத்தனாராக வேலை செய்து வந்தார். திருவேற்காடு, சுந்தர சோழபுரம் பகுதியில் புதிதாக வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு நேற்று வேலைக்கு வந்த கார்த்திக் வீட்டின் முதல் மாடியில் கயிறு எடுக்க சென்றார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே, கார்த்திக் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

The post திருவேற்காட்டில் மாடியில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் பலி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Thiruvekkad ,Poontamalli ,Thiruvekkat ,Maduravayal ,Nelkukunram ,Sakthivel Nagar ,Tiruvekkat ,
× RELATED திருவேற்காட்டில் கூவம்...