×

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா போக்சோவில் கைது ஆரணி அருகே பாலியல் வன்கொடுமை செய்து

ஆரணி, ஜூன்.15: ஆரணி அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து 4 மாதம் கர்ப்பமாக்கிய சித்தப்பாவை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவருடைய மகள் 13 வயது சிறுமி. மேலும், சிறுமி அதே கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், அவரது பெற்றோர்கள் ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து வந்து பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது, ஆரணி அடுத்த புங்கம்பாடி கிராமத்தை சேர்ந்த சிறுமியின் உறவினர் சித்தப்பாவான ராஜாபண்டியன் (28), கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து, பலமுறை சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து வீட்டில் யாரிடமாவது நடந்ததை கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால், பயந்துபோன அந்த சிறுமி நடந்த விஷயத்தை யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து வந்தது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து, சிறுமியின் தாய் ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜபாண்டியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா போக்சோவில் கைது ஆரணி அருகே பாலியல் வன்கொடுமை செய்து appeared first on Dinakaran.

Tags : Siddappa ,Poxo ,Arani ,Bokso ,Pokso ,
× RELATED ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு