×

பூந்தமல்லியில் ஜமாபந்தி நிறைவு நாளில் வருவாய் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ கிருஷ்ணசாமி வழங்கினார்

பூந்தமல்லி: பூந்தமல்லியில், ஜமாபந்தி நிறைவு நாளில் வருவாய் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டத்தில் கடந்த 6ம் தேதி முதல் நேற்று வரை 1432 ஆம் ஆண்டு பசலிக்கான வருவாய் தீர்வாய கூட்டம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற்றது. வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் உதவி ஆணையர் (கலால்) பரமேஸ்வரி தலைமை தாங்கினார். பூந்தமல்லி வட்டாட்சியர் மாலினி முன்னிலை வகித்தார். இந்த ஜமாபந்தி முகாமில் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட நகரம் மற்றும் கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் மனுக்கள் அளித்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டது. இந்நிலையில் கடைசி நாளான நேற்று பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ரயத்துவாரி விழாவில் சுமார் 150 பயனாளிகளுக்கு முழுப்புலம் பட்டா, உட்பிரிவு பட்டா, ஜாதி சான்றிதழ், விதவை சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேசிங்கு, மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் ஏ.ஜே.பவுல், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தே.சத்தியநாராயணன், மண்டல துணை வட்டாட்சியர்கள் ஜெயஸ்ரீ, காதர்பர்வீன், வட்ட வழங்கல் அலுவலர்அருள்குமார், துணை வட்டாட்சியர் (தேர்தல்) எம்.சரஸ்வதி, தலைமை நில அளவர் துரைராஜ், குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள் பூந்தமல்லி ம.சரண்யா, திருமழிசை சி.லலிதா , நேமம் கோ.ஐயப்பன் , வயலாநல்லூர் ஜெய்சங்கர், வானகரம் சீதாலட்சுமி , குறுவட்ட நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பூந்தமல்லியில் ஜமாபந்தி நிறைவு நாளில் வருவாய் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ கிருஷ்ணசாமி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Jamabandhi ,Poontamalli ,MLA ,Krishnasamy ,Revenue Department ,Thiruvallur district ,MLA Krishnasamy ,Dinakaran ,
× RELATED மதுரவாயலில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்