சேலம்: சேலம் இரும்பாலை திருமலைகிரி சங்கரன் வட்டத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு கவினேஷ்வரன்(3) உள்பட 2 குழந்தைகள் இருந்தனர். நேற்று காலை வீட்டில் ரேவதியும், குழந்தை கவினேஷ்வரனும் இருந்தனர். 50 அடி தூரத்தில் இருந்த கிணற்றுக்கு கவினேஷ்வரன் சென்றிருக்கிறான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரேவதி சத்தம் போட்டுக்கொண்டே மகனை பிடிப்பதற்கு ஓடிவந்தார். அப்போது அவன் நிலைதடுமாறி கிணற்றில் தவறி விழுந்தான். உடனே அவரும் குதித்து மகனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், மகனை காப்பாற்ற முடியாமல் கிணற்றுக்குள்ேளயே மயங்கினார். அக்கம்பக்கத்தினர் கட்டில் கட்டி ரேவதியையும் சிறுவனையும் மீட்டனர். ஆனால் சிறுவன் இறந்துவிட்டான்.
The post கிணற்றில் விழுந்த சிறுவன் பலி: காப்பாற்ற குதித்த தாயை கட்டில் கட்டி மீட்டனர் appeared first on Dinakaran.