×

தனது வீட்டை மீட்டு தரக்கோரிய புகாரில் நடிகர் அர்னவ் வழக்கை கோர்ட்டிற்கு மாற்ற போலீசார் முடிவு

சென்னை: தனது வீட்டை மனைவியிடம் இருந்து மீட்டு தரக்கோரி, நடிகர் அர்னவ் போலீசில் புகார் அளித்துள்ளார். சின்னத்திரை நடிகர் அர்னவ், தன்னுடன் நடித்த திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்தியதாக திவ்யா அளித்த புகாரின்பேரில் மாங்காடு மகளிர் போலீசார் அர்னவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், ஜாமீனில் வெளிவந்த அர்னவ் தனது வக்கீல்கள், அடியாட்களுடன் நேற்று முன்தினம் திருவேற்காட்டில் திவ்யா இருக்கும் வீட்டிற்கு வந்தார். இந்த வீடு தன்னுடைய வீடு என்றும், வசிக்க இடம் இல்லாததால் இந்த வீட்டில் தங்க போவதாக தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த திருவேற்காடு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இருவரையும் போலீசில் புகார் அளிக்குமாறு கூறி சென்றனர். இதையடுத்து, அர்னவ் தனது வக்கீல்களுடன் நேற்று திருவேற்காடு காவல் நிலையம் சென்று, தன் வீட்டில் திவ்யா இருப்பதாகவும், தான் தங்குவதற்கு வேறு இடம் இல்லாததால் தனது வீட்டில் இருக்கும் திவ்யாவை வெளியேற்றிவிட்டு, அவ்வீட்டை மீட்டு தர வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இது சொத்து பிரச்னை என்பதால், இந்த வழக்கை பூந்தமல்லி நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்து, அங்கு தீர்வு காண முடிவு செய்திருப்பதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தனது வீட்டை மீட்டு தரக்கோரிய புகாரில் நடிகர் அர்னவ் வழக்கை கோர்ட்டிற்கு மாற்ற போலீசார் முடிவு appeared first on Dinakaran.

Tags : Arnav ,Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...