×

கொள்கை உறுதியோடு பயணிக்கும் தி.மு.க இது போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சாது: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளின் மூலமாக தனக்கு எதிரான முற்போக்கு அரசியல் சக்திகளை அச்சுறுத்த பா.ஜ.க முயற்சிக்கின்றது. கொள்கை உறுதியோடு பயணிக்கும் தி.மு.க இது போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் நேற்று அவரது வீடு மற்றும் தலைமைச்செயலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்தநிலையில் நேற்று நள்ளிரவு அமைச்சர் செந்திபாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு முதலவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேற்குவங்க முதல்வர் மம்தா, டெல்லி முதலவர் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சென்னை முதன்மை நீதிமன்றத்தில் 3 மனுக்கள் அளிக்கப்பட்டது. திமுக சார்பில் ஜாமீன் மனு, அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் ஆட்கொணர்வு மனு மற்றும் அமலாக்கத்துறை சார்பில் அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு ஆகிய மனுக்களுக்கான வாதங்கள் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதையடுத்து மனுக்கள் மீதான விசாரணையை நாளைக்கு சென்னை முதன்மை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளின் மூலமாக தனக்கு எதிரான முற்போக்கு அரசியல் சக்திகளை அச்சுறுத்த பா.ஜ.க முயற்சிக்கின்றது. கொள்கை உறுதியோடு பயணிக்கும் தி.மு.க இது போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சாது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் என்றும் ஜனநாயக விரோதிகளை எதிர்ப்போம்” என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

The post கொள்கை உறுதியோடு பயணிக்கும் தி.மு.க இது போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சாது: அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.

Tags : Minister ,Love Mahesh ,Chennai ,J.J. Try ,Love Magesh ,
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...