×

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தூய்மை பணியாளர் வெட்டி கொலை..!!

தென்காசி: செங்கோட்டை தூய்மை பணியாளர் ராஜேஷ் (25) வெட்டி கொலை செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜேஷ். இவர் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இன்று காலை ராஜேஷ் வழக்கம் போல பணிக்கு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் வெளியே செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்படும் போது ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது.

இதில் ராஜேஷ் மோட்டார் சைக்கிள் அருகே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கொலையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த செங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தப்பி ஓடிய கும்பலை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தூய்மை பணியாளர் வெட்டி கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Red Fort, Tenkasi District ,Tenkasi ,Red Fort ,Rajesh ,Murugan ,Viswanathapuram, Tenkasi district Senkottai ,
× RELATED தென்காசி குற்றாலத்தில் 3 அருவிகளில் சென்சார் கருவிகள் : புதிய முயற்சி