×

சென்னை அபிராமபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் முன்னாள் அரசியல் உதவியாளர் வீட்டிற்கு சீல்: வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: சென்னை அபிராமபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் முன்னாள் அரசியல் உதவியாளர் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. உதவியாளர் கோகுல்ராஜ் என்பவருக்கு சொந்தமான 2 வீடுகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். வருமான வரித்துறை சோதனை மேற்கொண்ட இடங்களில், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, செந்தில் பாலாஜியின் முன்னாள் அரசியல் உதவியாளர் கோகுல்ராஜ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

சென்னை அபிராமபுரம் பகுதியில், ஸ்ரீபதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கோகுல்ராஜ். இவர் செந்தில் பாலாஜியின் உதவியாளராக இருக்கிறார். ஸ்ரீபதி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்திவந்த கோகுல் அரசு ஒப்பந்தங்களை எடுத்து வந்தார். இவரிடம் விசாரணை நடத்த வருமானவரித்துறையினர் முயற்சி செய்த போது சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது. இருமுறை சம்மன் அனுப்பியும் ஒத்துழைப்பு வழங்காததால் கோகுல் வீட்டுக்கு வருமானவரித்துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இரும்பு பைப்புகளை வைத்து வீட்டிற்குள் செல்ல முடியாத வகையில் அதிகாரிகள் தடுப்புகள் அமைத்தனர்.

The post சென்னை அபிராமபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் முன்னாள் அரசியல் உதவியாளர் வீட்டிற்கு சீல்: வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Abhramapuram, Chennai ,CHENNAI ,Abhramapuram ,Gokulraj ,Chennai Abhramapuram ,
× RELATED செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்...