×

1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: மிக்கிமவுஸ், ஜோக்கர் வேடம் அணிந்து ஆசிரியர்கள் வரவேற்பு

சென்னை : கோடை விடுமுறைக்கு பிறகு, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடந்தது. அதைத் தொடர்ந்து கீழ் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் வரை நடந்தது. தமிழகம் முழுவதும் மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டு, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ மாணவியருக்கு ஜூன் 12ம் தேதியும் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தனியார் பள்ளிகளும் இதே நாளில் திறக்கப்படும் என அறிவித்தனர். இதையடுத்து, இன்று 6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

இந்நிலையில், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசு, உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள், இது தவிர எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் குழந்தைகளுக்கும் இன்று வகுப்பு நடைபெறுகிறது. மாணவர் மாணவிகளை பெற்றோர் அழைத்து வந்து அவர்கள் பயிலும் பள்ளிகள் விட்டு சென்றனர். பள்ளிக்கு வரும் குழந்தைகளை உற்சாகப்படுத்துவதற்காக சில பள்ளிகளில் மிக்கிமவுஸ், ஜோக்கர் என குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை போன்று வேடம் அணிந்தும் உற்சாக இமோஜி வரைபடங்களை கொண்டும், ரோஜாப்பூ மற்றும் இனிப்புகள் வழங்கி குழந்தைகளை பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர்.

The post 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: மிக்கிமவுஸ், ஜோக்கர் வேடம் அணிந்து ஆசிரியர்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Mickey Mouse ,Joker ,Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...