×

காரப்பாக்கம் ராஜிவ்காந்தி சாலையில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது

துரைப்பாக்கம்: சென்னை, காரப்பாக்கம் ராஜிவ்காந்தி சாலையில் 4 பேர் பைக்கில் வந்து போதைக்காக பயன்படுத்தும் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்வதாக கண்ணகி நகர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அவர்கள், காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி (23), ராஜ்குமார் (26), மணிகண்டன் (24), ஷியாம் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் ஆன்லைன் மூலமாக மும்பையில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை கொரியர் மூலம் வாங்கி விற்பனை செய்துள்ளனர். கைதான 4 பேரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புகழ் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 350 மாத்திரைகள், 5 ஊசிகள், 2 பாட்டில் திரவம், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

The post காரப்பாக்கம் ராஜிவ்காந்தி சாலையில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Karapakkam Rajivgandi Road ,Karapakkam Rajivkandi Road, Chennai ,Karapakam Rajivkandi Road ,Dinakaran ,
× RELATED பீகாரில் வீட்டில் இருந்த பெண்ணை காரில் கடத்தி கூட்டு பலாத்காரம்