×

கோயிலுக்கு சென்ற பெண்ணிடம் 7 சவரன் பறிப்பு

சென்னை, ஜூன் 14: சைதாப்பேட்டை கருணாநிதி நகரை சேர்ந்தவர் பூங்கொடி (46). இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே உள்ள சவுந்தரீஸ்வரர் கோயிலுக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் அருகே, பைக்கில் வந்த மர்ம நபர்கள், பூங்கொடி கழுத்தில் இருந்த 7 சவரன் செயினை பறித்தனர். இதில் பூங்கொடி நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்.

அப்போது எதிரே வந்த ஆட்டோ நல்வாய்ப்பாக அவர் மீது மோதாமல் நின்றது. இதனால் அவர் உயிர் தப்பினார். 7 சவரன் செயினுடன் பைக் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். பிறகு சம்பவம் குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பூங்கொடி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று பைக்கில் தப்பி சென்ற வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

The post கோயிலுக்கு சென்ற பெண்ணிடம் 7 சவரன் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Saithapet Karunanidi City ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...