×

மனைவி மாயம் கணவர் புகார்

 

கம்பம், ஜூன் 14: உத்தமபாளையம் தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (40). இவரது மனைவி சின்னம்மாள் (35) இவர்கள் இருவரும் கம்பம் புதுக்குளம் ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இவர்கள் மகளுக்கும், அவரது கணவருக்கும் குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் சின்னம்மாள் மன உளைச்சலுக்கு உள்ளாகி புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி வீட்டிற்கு சென்ற சுந்தரம் வீட்டில் மனைவி சின்னம்மாள் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புகாரில் கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மனைவி மாயம் கணவர் புகார் appeared first on Dinakaran.

Tags : Polam ,Chundaram ,Uthampalayam ,Sinnammal ,
× RELATED தேவாரம் பகுதியில் குறைந்து வரும் நாட்டு கோழி வளர்ப்பு