×

சர்வதேச தடகளத்தில் வெற்றி கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்

ராமநாதபுரம், ஜூன் 14: உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பரமக்குடி மாணவர் வெள்ளிப் பதக்கம் பெற்று கலெக்டரிடம் வாழ்த்து பெற்றார்.உஸ்பெகிஸ்தான் தஸ்கேன்ட் எனுமிடத்தில் கடந்த மே 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை 18 வயதிற்குட்பட்ட ஆசியா நாடுகள் அளவிலான தடகள போட்டி நடந்தது. இதில் 45 நாடுகள் கலந்து கொண்டது. இதில் இந்தியாவிலிருந்து பல மாநிலங்கள் கலந்து கொண்டது.

தமிழ்நாட்டிலிருந்து பரமக்குடியை சேர்ந்த சரண்(17) கலந்து கொண்டார். தடகள தொடர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். கடந்த 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை தென்கொரியாவில் 20 வயதிற்குட்பட்டவர்களுக்கு நடைபெற்ற தடகள ஓட்ட போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். இவர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தினேஷ், பயிற்சியாளர் அருண் ஆகியோருடன் வந்து கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் வாழ்த்து பெற்றார்.

The post சர்வதேச தடகளத்தில் வெற்றி கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற மாணவர் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Paramakkudy ,International Athletics Championship ,Uzbekistan ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்