×

கடனை திரும்பி கேட்டதால் ஆத்திரம் தொழிலதிபர் மனைவி படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

வளசரவாக்கம்: கடனை திருப்பி கேட்ட ஆத்திரத்தில், தொழிலதிபரின் மனைவி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் அப் மூலம் அனுப்பி மிரட்டிய இலங்கையை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். கோடம்பாக்கம் ரத்தினாம்மாள் தெருவை சேர்ந்தவர் வானமாமலை (46). தொழிலதிபரான இவர், இலங்கைக்கு சுற்றுலா சென்றபோது, இலங்கையை ேசர்ந்த சுகிகரன் (56) என்பரின் நட்பு கிடைத்துள்ளது. அப்போது, சுகிகரன் தான் தற்போது சென்னை கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் வசித்து வருவதாக கூறியுள்ளார். அதன்பிறகு நண்பர்களாகி உள்ளனர். அதன் மூலம் சுகிகரன் அவசர தேவைக்காக கடனாக ரூ.75 ஆயிரத்தை, தொழிலதிபர் வானமாமலை கொடுத்துள்ளார்.

பணம் வாங்கி நீண்ட நாட்களாகியும் அதை சுகிகரன் திருப்பி தரவில்லை. இதனால், பணத்தை தொழிலதிபர் வனமாலை கடனை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு சுகிகரன் ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளார். அத்துடன், தொழிலதிபர் மனைவியின் புகைப்படத்தை எடுத்து ஆபாச நடிகைகளின் புகைப்படத்துடன் மார்பிங் செய்து அதை, தொழிலதிபர் வானமாமலையின் வாட்ஸ் அப் எண்ணிக்கு அனுப்பியுள்ளார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலதிபர் உடனே சுகிகரனுக்கு போன் செய்து கேட்டுள்ளார். அதற்கு சுகிகரன், என்னிடம் இனி பணம் கேட்டால் உனது மனைவியின் ஆபாச படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.

இது குறித்து தொழிலதிபர் வானமாமலை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். அதில், புகார் அளித்த தொழிலதிபரின் மனைவியின் புகைப்படத்தை நடிகைகளின் புகைப்படத்துடன் மார்பிங் செய்து அதை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் இலங்கையை சேர்ந்த சுகிகரன் மீது ஐபிசி 294 (பி), 507, 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து தொழிலதிபரின் மனைவியின் மார்பிங் செய்த ஆபாச படங்கள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

The post கடனை திரும்பி கேட்டதால் ஆத்திரம் தொழிலதிபர் மனைவி படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Athram ,Valasaravakkam ,
× RELATED பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால்...