×

வன்னியர்களை அவதூறாக பேசியதாக திருமாவளவன் மீது வழக்கு

சேலம்: வன்னியர்களை அவதூறாக பேசியதாக திருமாவளவன் மீது வன்னியர் சங்கம் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வன்னியர் சங்கத்தின் மாநில செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கார்த்தி, சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று திருமாவளவன் மீது அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒட்டுமொத்த வன்னியர் சமுதாய மக்களை இழிவுபடுத்தி பேசியிருக்கிறார். இதனால், இருதரப்பு மக்களிடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அமைதியை சீர்குலைத்து சுய லாபத்தை திருமாவளவன் தேடி வருகிறார். எனவே அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார். இதற்காக அவர் பேசிய வீடியோ ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறார்.

The post வன்னியர்களை அவதூறாக பேசியதாக திருமாவளவன் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Salem ,Vanniyar Sangam ,Vanniyar Sangh ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை