×

மயிலாடுதுறை அருகே மது குடித்து இறந்த இருவரும் சயனைடு கலந்து கொலை: ஆட்சியர் மகாபாரதி தகவல்..!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மது குடித்து இறந்த இருவரும் சயனைடு கலந்து கொலை செய்யப்பட்டுள்ளனர் என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை அருகே உள்ள கொத்தங்குடியை சேர்ந்தவர் பழனிகுருநாதன்(50). இவர், மங்கை நல்லூர் என்ற இடத்தில் கொல்லுப்பட்டறை நடத்தி வந்தார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பூராசாமி(65) என்பவர் வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு கொல்லுப்பட்டறையில் பழனிகுருநாதனும், பூராசாமியும் மயங்கி கிடந்தனர்.

அவர்கள் அருகே மதுபாட்டில்கள் கிடந்தது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது இருவரும் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பேரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்கள் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை அருகே மது குடித்து இறந்த இருவரும் சயனைடு கலந்து கொலை செய்யப்பட்டுள்ளனர் என ஆட்சியர் மகாபாரதி தகவல் தெரிவித்துள்ளார். பழனி குருநாதன் மற்றும் பூராசாமி ஆகியோரை கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுவில் சயனைடு கலந்து கொடுத்து 2 பேரை கொலை செய்த சம்பவத்தில் மனோகர், பாஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சொத்து தகராறில் டாஸ்மாக் மதுவில் சயனைடு கலந்து திட்டமிட்டு 2 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். மதுவில் சயனைடு கலந்து பழனி முருகநாதன், பூராசாமி ஆகியோர் கொலை செய்யப்பட்டது உடற்கூராய்வில் தெரிய வந்தது. உடற்கூராய்வில் சயனைடு மற்றும் எத்தில் ஆல்கஹால் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

 

The post மயிலாடுதுறை அருகே மது குடித்து இறந்த இருவரும் சயனைடு கலந்து கொலை: ஆட்சியர் மகாபாரதி தகவல்..! appeared first on Dinakaran.

Tags : Mayiladududwara ,Ruler ,Mayaladudurai ,Arrier Mahaparathi ,Mayiladudurai ,Ruler Mahaparati ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...