மதுரை, ஜூன் 13: மதுரையில் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி மதுரை அண்ணாநகர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சேது ரமேஷ், மதுரை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் தென் மண்டலத்தில் இருந்து மதுரை நகருக்கு வந்த இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத் அண்ணாநகர் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், இன்ஸ்பெக்டர் ரெஜினா போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும், எஸ்.எஸ்.காலனி குற்றப்பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ராஜதுரை விளக்குத்தூண் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
The post மதுரையில் நான்கு இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் appeared first on Dinakaran.
