×

பாழடைந்த கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

 

மதுக்கரை,ஜூன்13: கோவை சுகுணாபுரம் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் சுபைர்(50). குடிபழக்கத்திற்கு அடிமையான இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்தார்.வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட இவர் கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று கடந்த 9ம் தேதி வீடு திரும்பினார். நேற்று முன் தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற சுபைர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

சந்தேகம் அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.இந்தநிலையில் மதுக்கரை கோலப்பொடி மலை அருகே உள்ள பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் சடலமாக மிதந்தவர் சுகுணாபுரத்தை சேர்ந்த சுபைர் என்பது தெரியவந்தது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாழடைந்த கிணற்றில் ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Madhukarai ,Subair ,Sakul Hameedu ,Sukunapuram ,Coimbatore ,
× RELATED மதுக்கரை ஆர்.டி.ஓ.செக்போஸ்ட் அருகே...