×

புளியந்தோப்பில் கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பில் கஞ்சாவிற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை புளியந்தோப்பு பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்கப்பதாக புளியந்தோப்பு சரக உதவி கமிஷனர் அழகேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று மதியம் புளியந்தோப்பு பட்டாளம் மார்க்கெட் சந்திப்பு பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த 2 பேரை மடக்கினர். சோதனையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனையடுத்து அவர்களது வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் சிறுசிறு கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்து, காவல் நிலையம் கொண்டுவந்தனர். விசாரணையில், சூளை தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற தோட்டா விக்கி (24) மற்றும் புளியந்தோப்பு நயனியப்பன் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து சுமார் 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர்கள் ஓட்டி வந்த பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

The post புளியந்தோப்பில் கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tamarind ,Perambur ,Pulyanthope ,Chennai ,
× RELATED மாவட்டத்தில் விளைச்சல் அமோகம்;...