×

(தி.மலை) கிராம பகுதிகளில் ₹50 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிைறவேற்றம் அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்தில்

செய்யாறு, ஜூன் 13: செய்யாறு அருகே அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம பகுதிகளில் ₹50 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொவது என ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு தலைவர் திலகவதிராஜ்குமார் தலைமையில் மாதாந்திர மன்ற கூட்டம் நேற்று நடந்தது. துணைத் தலைவர் அருணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரி, குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஒன்றியத்தில் கிராமப் பகுதிகளில் உள்ள துவக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை உள்ள பள்ளி கழிப்பிட பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகளின் செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் எச்சூரில் நெற்கலம், உக்கல் மற்றும் தவசியில் பேவர் பிளாக் சாலை, அளத்துறை கிராமத்தில் நாடக மேடை, இருங்கல் பள்ள காலனியில் தார் சாலை உள்பட ஒன்றிய கிராம பகுதிகளில் ₹50 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய இன்ஜினியர்கள் வேளாங்கண்ணி, ரமேஷ், ராஜேஸ்வரி ஒன்றிக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். ஒன்றிய மேலாளர் சசிகலா நன்றி கூறினார்.

The post (தி.மலை) கிராம பகுதிகளில் ₹50 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிைறவேற்றம் அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்தில் appeared first on Dinakaran.

Tags : D.Malai ,Anakavur Panchayat Union ,Seyyar ,T.Malai ,Dinakaran ,
× RELATED (தி.மலை) ஆர்வத்துடன் வாக்களித்த பெண் வாக்காளர்கள் கலசபாக்கம் தொகுதியில்