×

(தி.மலை) முரம்பு மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் வேட்டவலம் அருகே

வேட்டவலம், ஜூன் 13: வேட்டவலம் அருகே முரம்பு மண் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட செய்யாலேரி கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்று முரம்பு மண் கடத்தப்படுவதாக வேட்டவலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த எஸ்ஐ சுப்பிரமணி மற்றும் போலீசார் ஏரிக்கரை அருகே வந்து கொண்டிருந்த டிராக்டரை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரை பார்த்தவுடன் டிராக்டரை ஓட்டி வந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் அதே கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பதும் அவர் ஏரியில் இருந்து தனது டிராக்டரில் முரம்பு மண் கடத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து ராமச்சந்திரனின் டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post (தி.மலை) முரம்பு மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் வேட்டவலம் அருகே appeared first on Dinakaran.

Tags : Th ,. Malai ,Murambu ,Vettavalam ,Dinakaran ,
× RELATED (தி.மலை) ஆர்வத்துடன் வாக்களித்த பெண் வாக்காளர்கள் கலசபாக்கம் தொகுதியில்