×

நாங்குநேரி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு

நாங்குநேரி, ஜூன் 13: நாங்குநேரி அருகே வாலிபரை வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்தவர் சமுத்திரபாண்டி மகன் செல்வராஜ் (28). இவரும் மஞ்சங்குளத்தை சேர்ந்த கேத்திரபால் மகன் மணிகண்டன் (30) என்பவரும் நாங்குநேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரே வகுப்பில் படித்ததில் நண்பர்கள் ஆவார்கள். இந்நிலையில் மணிகண்டனின் நடத்தையை செல்வராஜ் கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் மணிகண்டன், செல்வராஜை அருகில் உள்ள பம்பன்குளத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு சென்ற செல்வராஜை, மணிகண்டன், நாங்குநேரியை சேர்ந்த மணி மகன் மகாலிங்கம் என்ற சின்னத்துரை (28), வாகைகுளத்தை சேர்ந்த மாசானமுத்து மகன் பொன்ராஜ் ஆகியோர் சேர்ந்து தாக்கி, அரிவாளால் வெட்டினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதில் காயமடைந்த செல்வராஜ் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து இதுதொடர்பாக மணிகண்டன், மகாலிங்கம் என்ற சின்னத்துரையை கைது செய்தனர். பொன்ராஜை தேடி வருகின்றனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டன், மகாலிங்கம் மற்றும் தலைமறைவாகியுள்ள பொன்ராஜ் ஆகியோர் தம்புபுரத்தில் உள்ள ராஜையா (49) என்பவரது டீக்கடைக்கு சென்று அவரது செல்போனையும் திருடி சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாங்குநேரி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Nanguneri ,Nanggueneri ,Nanganeri ,Dinakaran ,
× RELATED மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன்...