×

மது பாட்டிலால் குத்தி இளம்பெண் கொலை காதலனிடம் விசாரணை

அயோத்தியாப்பட்டணம்: மது பாட்டிலால் குத்தி இளம்பெண்ணை கொலை செய்த காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், காரிப்பட்டி அருகே, குழந்தைசாமி நாடார் நகரைச் சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி சசிகலா (31). இவர்களுக்கு மகனும், மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 6 வருடங்களுக்கு முன் தம்பதியர் பிரிந்து விட்டனர். குழந்தைகள் இருவரும், திருப்பூரில் வேலை செய்து வரும் ராமனுடன் வசித்து வருகின்றனர். சசிகலா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலை 7 மணியளவில், அப்பகுதியில் உள்ள ஜே.ஜே.நகரில் உள்ள பொட்டல்காட்டில், சசிகலா மது பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து காரிப்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், சசிகலாவுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவருடன் தகாத உறவு இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து சசிகலாவின் காதலன் பிரபுவை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

The post மது பாட்டிலால் குத்தி இளம்பெண் கொலை காதலனிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Ayodhyapatnam ,Salem district, ,Karipatti ,
× RELATED என்னுடையது விஸ்வரூப வெற்றி!