×

அண்ணாமலையை விமர்சித்தால் பாதிப்பு அதிமுகவுக்கு தான்: ஜெயக்குமாருக்கு கரு.நாகராஜன் கண்டனம்

சென்னை: உலகின் பெரிய அரசியல் இயக்கத்தை 19 கோடி உறுப்பினர்களை கொண்ட இயக்கத்தை செடி என்கிறார் ஜெயக்குமார். அவர் என்ன நிலையில் இருந்து பேசுகிறார் என்று புரியவில்லை என்று பாஜ மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பாஜ கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பற்றி முன்னாள் அமைச்சர் ெஜயக்குமார் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியை கூட ஒழுங்காக படிக்காமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார். தினந்தோறும் பேட்டி கொடுப்பது அவருக்கு பொழுதுபோக்காக இருக்கிறது. எங்கள் மாநில தலைவர் பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் கிடையாது. எங்கள் தலைவர் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதில் தொடக்கத்தில் இருந்தே உறுதியாக இருக்கிறார்.

ஜெயக்குமார் நுனி மரக்கிளையில் அமர்ந்து கொண்டு கிளையின் அடிப்பகுதியை வெட்டிக் கொண்டு இருக்கிறார். இது போன்ற பேட்டிகளால் பாதிப்பு உங்களுக்கு தான். உலகின் பெரிய அரசியல் இயக்கத்தை, 19 கோடி உறுப்பினர்களை கொண்ட இயக்கத்தை செடி என்கிறார். என்ன நிலையில் இருந்து பேசுகிறார் என்று புரியவில்லை. தென்சென்னை நாடாளுமன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டது கூட ஜெயக்குமாருக்கு விரக்தியை தந்திருக்கும் என்று கருதுகிறேன். எங்கே தன் மகன் ஜெயவர்தன் போட்டியிட விரும்பும் தொகுதி பறி போய் விடுமோ என்று கலங்கிப் போயிருப்பார். கூட்டணி என்பது எல்லோரும் இணைந்தது தான், இதில் பெரியண்ணன் வேலை யாருக்கும் கிடையாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post அண்ணாமலையை விமர்சித்தால் பாதிப்பு அதிமுகவுக்கு தான்: ஜெயக்குமாருக்கு கரு.நாகராஜன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,AIADMK ,Karu.Nagarajan ,Jayakumar ,CHENNAI ,Jeyakumar ,Cedi ,Nagarajan ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...