×

புளியங்குடியில் பரபரப்பு; பெட்டிக்கடையில் வைத்து மது விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது: 50 மதுபாட்டில்கள் பறிமுதல்

புளியங்குடி: புளியங்குடியில் மது விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டி மற்றும் அவரது உதவியாளரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தென்காசி மாவட்டம் புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் எஸ்.ஐ. பரமசிவம் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புளியங்குடி பஸ் நிலையம் அருகில் உள்ள பெட்டிக்கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து கடையில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 50 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மதுபாட்டில்கள் விற்பனை செய்த கடை உரிமையாளரான புளியங்குடி நடுத்தெருவை சேர்ந்த முப்பிலிமாடத்தி(60), அவருக்கு உதவியாக செயல்பட்ட புளியங்குடி நடு கருப்பழகு தெரு மாடசாமி மகன் தங்கச்சாமி(26) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புளியங்குடியில் பரபரப்பு; பெட்டிக்கடையில் வைத்து மது விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது: 50 மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Bulyangudi ,Bleyangudi ,Dinakaran ,
× RELATED வீட்டை இப்படி சுத்தம் செய்யலாம்!