கான்பூர்: கான்பூர் ரயில் நிலையத்தில் பெட்டி கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மத்திய ரயில் நிலையத்தில் உள்ள உணவுக் கடையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், தீ விபத்தை தொடர்ந்து ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு வாகனமும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது. சிறிது நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
கான்பூர் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் எண்-9 ல் விபத்து நடந்துள்ளது. தீ அதிக அளவில் பற்றி எரிந்ததால் மேடையில் இருந்தவர்கள் அலறடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினர். மேலும் தகவல் அறிந்த ஆர்பிஎஃப் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மற்ற பணியாளர்களுடன் சேர்ந்து தீயணைப்பு மற்றும் தண்ணீர் உதவியுடன் தீயை அணைத்தனர். ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும், எந்த வித சேதமும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
The post உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் ரயில் நிலையத்தில் பெட்டி கடையில் தீ விபத்து: மக்கள் அச்சம் appeared first on Dinakaran.