×

இளம்பெண்ணை காரில் கடத்தி சென்று 5 நாட்களாக பலாத்காரம் செய்த கும்பல்: ரூ.500 கொடுத்து ரயிலில் ஏற்றிவிட்ட கொடுமை

பரேலி: இளம்பெண்ணை காரில் கடத்திச் சென்று 5 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்த கும்பல், ரூ. 500 ெகாடுத்து ரயிலில் ஏற்றிவைத்த கொடுமை உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் மிர்கஞ்ச் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 6ம் தேதி வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த ஷா ஆலம் என்பவர், லிப்ட் கொடுப்பதாக கூறி காரில் அழைத்து சென்றார். உத்தரகாண்ட் மாநிலம் காஷிபூருக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றார்.

அங்குள்ள ஓட்டலில் வாடகை அறை எடுத்து, அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். அங்கிருந்து அவர்கள் கிளம்பும் போது, ஷா ஆலமின் நண்பன் இர்பான் வந்தார். அவரும் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். அடுத்த நாள் அந்த பெண்ணை நொய்டாவில் உள்ள தனது நண்பரான நதீம் குரேஷியிடம் அழைத்துச் சென்றனர். அவர், அந்தப் பெண்ணை நொய்டாவில் உள்ள விடுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தொடர்ந்து அந்தப் ெபண்ணிடம் ஐநூறு ரூபாயை கொடுத்து, காசிபூர் செல்லும் ரயிலில் ஏற்றிவைத்தனர். ரயிலில் காசிபூர் வந்து சேர்ந்த அந்தப் ெபண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் போலீசில் அளித்த புகாரின் பேரின் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5 நாட்களாக அந்தப் பெண்ணை கடத்தி வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்த 3 குற்றவாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.

The post இளம்பெண்ணை காரில் கடத்தி சென்று 5 நாட்களாக பலாத்காரம் செய்த கும்பல்: ரூ.500 கொடுத்து ரயிலில் ஏற்றிவிட்ட கொடுமை appeared first on Dinakaran.

Tags : Bareilly ,
× RELATED கொலை, கொள்ளை உள்பட 21 வழக்குகள்:...