×

10 சிங்கங்களின் பிடியில் இருந்து தப்பிய ஒற்றை எருமை

புதுடெல்லி:சிங்கங்கள் ஒன்று சேர்ந்து விலங்குகளை அடித்துக் கொன்று சாப்பிடும் வீடியோவை பார்த்திருக்க முடியும். எருமை போன்ற பெரிய விலங்குகளை சிங்கங்கள் ஒன்று சேர்ந்து வேட்டையாடி சாப்பிட்டுவிட்டால், சுமார் ஐந்து நாட்களுக்கு அவை வேட்டையாட வேண்டியதில்லை. விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் வெளியிட்ட வீடியோவில், 10 சிங்கங்கள் ஒன்று சேர்ந்து எருமையை தாக்க முயன்றன.

அருகில் சிற்றாறு ஒன்று சென்றதால், அந்த ஆற்றின் வழியாக எருமை தப்பிக்க முயல்கிறது. இருந்தும் அந்த சிங்கங்கள் எருமையை தாக்க முயல்கின்றன. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தும், சிங்கங்களின் பிடியில் சிக்காமல் சிற்றாற்றின் வழியாக எருமை நீந்தி தப்பித்துவிடுகிறது. ஏமாற்றடைந்த சிங்கங்கள் வேறு வழியின்றி, வந்த பாதையை நோக்கி திரும்பி செல்கின்றன.

The post 10 சிங்கங்களின் பிடியில் இருந்து தப்பிய ஒற்றை எருமை appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு