×

திருவள்ளூர் மாவட்டத்தில் அறங்காவலர்களை நியமனம் செய்வதற்கான மாவட்ட குழு பதவி ஏற்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் அறங்காவலர்களை நியமனம் செய்வதற்கான மாவட்ட குழு பதவியேற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பரம்பரை முறை வழிசாரா திருக்கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்திட தகுதி வாய்ந்த நபர்களை தெரிவு செய்து பரிந்துரைப்பதற்கு மாவட்டக்குழு நியமனம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக இன்று காலை 10 மணி அளவில் வேலூர் மண்டல இணை ஆணையர் ரமணி மற்றும் திருவள்ளூர் உதவி ஆணையர் சித்ராதேவி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட குழு தலைவராக திரு.எம்.சி. வெங்கடேஸ்வர பாபு, குழு உறுப்பினர்களாக திரு.T. லட்சுமிநாராயணன், திரு.க.வெங்கடேஷ், திரு.கோ.கார்த்திகேயன், திருமதி.ஆர்.மேனகா ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சந்திரன், திருவள்ளூர் நகரமன்ற தலைவர் திருமதி.உதய மலர் பாண்டியன், நகரமன்ற துணைத்தலைவர் திரு.சு.ரவிச்சந்திரன் மற்றும் உள்ளாட்சி பிரதிகள், திருக்கோயில் செயல் அலுவலர்கள், ஆய்வர்கள், திருக்கோயில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் அறங்காவலர்களை நியமனம் செய்வதற்கான மாவட்ட குழு பதவி ஏற்பு..!! appeared first on Dinakaran.

Tags : District Committee for Appointment of Trustees ,Thiruvallur District ,Thiruvallur ,District ,Vizara ,District Committee ,
× RELATED மீஞ்சூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது