×

தருவைகுளம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

குளத்தூர், ஜூன் 12: குளத்தூரையடுத்த வேப்பலோடை பாண்டியாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் அருண்ராஜா(26). தூத்துக்குடியில் உள்ள தனியார் லாரி செட்டில் அவருக்கு சொந்தமான லாரியுடன் டிரைவர் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் தூத்துக்குடியிலிருந்து வேப்பலோடைக்கு பைக்கில் அருண்ராஜா வந்து கொண்டிருந்தார். தருவைகுளம் அடுத்த சமத்துவபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் வரும்போது பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அருண்ராஜா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து அங்குவந்த தருவைகுளம் போலீசார் அருண்ராஜா உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post தருவைகுளம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Daruwaikulam ,Kulathur ,Mariyappan ,Arunraja ,Veppalodai Pandiyapuram South Street ,Thoothukudi ,
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு