×

கற்கள் கடத்திய 3 லாரி பறிமுதல்

ஓசூர், ஜூன் 12: பேரிகை அருகே புக்கசாகரத்தில் இருந்து, ஓசூர் நோக்கி 3 லாரிகளில் கற்கள் கடத்தி வருவதாக வருவாய்த்துறைக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து சூளகிரி தாசில்தார் பன்னீர்செல்வி, பேரிகை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் புக்கசாகரம் -ஓசூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரை பார்த்ததும் டிரைவர்கள் லாரிகளை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டனர். இதையடுத்து போலீசார் 69 டன் கற்களுடன், 3 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் 3 லாரிகளிலும் கற்கள் கடத்தியது தெரியவந்தது. தப்பியோடிய டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post கற்கள் கடத்திய 3 லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Pukasagaram ,Barikai ,Dinakaran ,
× RELATED குழாய் பதிப்பதை தடுத்து விவசாயிகள் போராட்டம்