×

தா.பழூர் பகுதியில் சிமெண்ட், தார் சாலை அமைக்கும் பணி

 

தா.பழூர், ஜூன் 12: அரியலூர் மாவட்டம்,தா.பழூர் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 2022 – 2023 திட்டத்தின் கீழ், இருகையூர் ஊராட்சி, கூழாட்டுக்குப்பம் கிராமத்தில், அருந்ததியர் தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி மற்றும் நாயகனைபிரியாள் ஊராட்சி, மேலமிக்கேல் பட்டியில், கல்லறை செல்லும் வழியில் ரூ.5லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி மற்றும் பொற்பதிந்தநல்லூர் ஊராட்சி, அர்த்தனேரி மேலத் தெருவில் ரூ.5லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி மற்றும் சோழன்மாதேவி ஊராட்சி, அம்பிகாபுரம் ஆதிதிராவிடர் காலனி முதல் முதலியார் தெரு வரை ரூ.5லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி மற்றும் கோடாலிகருப்பூர் ஊராட்சி, வக்காரமாரி காலனி தெருவில் ரூ.5லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை க.சொ.க.கண்ணன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தலிங்கம், விஸ்வநாதன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்கண்ணன், உதவி பொறியாளர் சுமதி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் ராஜவேல், நிர்மல்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் தட்சிணாமூர்த்தி (இருகையூர்), ராசாராம் (நாயகனைபிரியாள்), சத்தியராஜ் (பொற்பதிந்தநல்லூர்), ஜெயலட்சுமி (சோழன்மாதேவி), சுதா இளங்கோவன் (கோடாலிகருப்பூர்), மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் ராமதுரை, ஒன்றிய கழக அவை தலைவர் சூசைராஜ் பொருளாளர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தா.பழூர் பகுதியில் சிமெண்ட், தார் சாலை அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Tha.Bahur ,Tha.Pazhur ,Ariyalur District ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கு நெல்வயல்களில் களர்...